Untouchability in india
Explain the importance of translation in the indian context.
Suratha Memorial Day: உவமை கவிஞர் சுரதா நினைவு தினம் இன்று!
தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / Suratha Memorial Day: உவமை கவிஞர் சுரதா நினைவு தினம் இன்று!
வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலவு கவியரங்கம், படகு கவியரங்கம் என கவியரங்க நிகழ்ச்சியை முதல் முதலாக நடத்தி இளைஞர்களின் கவி உணர்ச்சிக்கு தீணி போட்டார்.
சுரதா
தமிழின் உயர்வுக்காக பாடுபட்டவர்களில் ஒருவரான கவிஞர் சுரதா நினைவு நாளில் அவர் குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
சுரதாவின் பெற்றோர்
தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்ற சிற்றூரில் 1921ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி பிறந்தார்.
What is untouchability
இவருடைய தந்தை பெயர் திருவேங்கடம். தாயார் செண்பகம் அம்மையார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் இராச கோபாலன். தமிழ் மீதான பற்றால் சுப்பு ரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார்.
பள்ளி இறுதி வகுப்பு வரை சுரதா கல்வி பயின்றார்.
இவர் அருணாச்சல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணத்தை கற்றுத் தேர்ந்தார்.
குடும்பம்
கவிஞர் சுரதாவிற்கு சுலோசனா என்ற மனைவியும் கல்லாடன் என்ற மகனும் உள்ளனர். இவரின் மருமகள் ராஜேஸ்வரி கல்லாடன்.